• Home
  • Agriculture News Tamil
  • ஏலக்காய் பயிரில் மருந்துகள் அடித்தாலும் , பழுதுகள் ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது?

ஏலக்காய் பயிரில் மருந்துகள் அடித்தாலும் , பழுதுகள் ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது?

ஏலக்காய் (Cardamom) என்பது மிகவும் மதிப்புமிக்க மசாலா வகை. இது அதிக பராமரிப்பு தேவைப்படும் பயிர். ஏலக்காயை பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை (pesticides) பொதுவாக மாதந்தோறும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பல விவசாயிகள் சொல்வது என்னவென்றால், “மாதந்தோறும் பூச்சிக்கொல்லி போட்டாலும் பழுதுகள் மீண்டும் வருது!”

இது ஏன் நடக்கிறது? இதற்கான காரணங்களும் தீர்வுகளும் கீழே பார்க்கலாம்.

பழுதுகள் மீண்டும் வருவதற்கான காரணங்கள்:

 

1. பூச்சிகள் எதிர்ப்பு சக்தி பெறுதல்
ஒரே மாதிரியான பூச்சிக்கொல்லியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், பூச்சிகளுக்கு அதற்கெதிரான சக்தி (resistance) உருவாகிறது. அதனால், அந்த மருந்து வேலை செய்யாமல் போய்விடும்.

2. தவறான நேரத்தில் பூச்சிக்கொல்லி போடுதல்
மழைக்கு முன்னாடி அல்லது அதிக வெயிலில் பூச்சிக்கொல்லி போட்டால், அது பயிரில் சரியாக வேலை செய்யாது. சில நேரங்களில், மருந்தின் அளவு கூட சரியில்லாமல் இருக்கும்.

3. மருந்து அனைத்து இலைகளுக்கும் செல்வதில்லை
Spray செய்வதற்குப் போது எல்லா இலைகளுக்கும், காய்களுக்கும் மருந்து செல்லாவிட்டால், சில பூச்சிகள் உயிருடன் இருந்துவிடும். அதுவே மீண்டும் தாக்கும்.

4. பல வகையான பூச்சிகள் வருதல்
ஒரு மருந்து ஒரு வகை பூச்சிக்காக மட்டுமே வேலை செய்யும். ஆனால் வேறு வகையான பூச்சிகள் கூட வரலாம். உதாரணமாக: thrips, shoot borers, aphids போன்றவை.

5. பயிர் நிலத்தில் சுத்தம் இல்லாதிருத்தல்
விழுந்த இலைகள், பழைய காய்கள், களைகள் இவற்றை நன்றாக அகற்றாமல் இருந்தால், பூச்சிகள் அதிலேயே இருக்க முடியும். அவை தொடர்ந்து தாக்கும்.

இதற்கான தீர்வுகள்:

 

1. பூச்சிக்கொல்லியை மாற்றி மாற்றி பயன்படுத்துங்கள்
ஒரே மாதிரியான மருந்தை ஒவ்வொரு முறையும் பயன்படுத்த வேண்டாம். மாத்தி மாத்தி, வேறு வகை மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

2. இயற்கை முறைகளை சேர்த்து பயன்படுத்துங்கள்
Neem oil, Trichoderma, Metarhizium போன்ற உயிரியல் பூச்சிக்கொல்லிகள் நல்ல பலன் தரும். இதனால் பூச்சிகளும் கட்டுப்படும், பயிரும் பாதுகாப்பாக இருக்கும்.

3. வாரத்திற்கு ஒரு முறை பயிரை கவனிக்க வேண்டும்
பழுது வர ஆரம்பிக்கும் நேரத்திலேயே கண்டுபிடித்தால், பெரிய தாக்கம் இல்லாமல் தடுக்கலாம்.

4. நிலத்தை சுத்தமாக வைத்திருங்கள்
விழுந்த இலைகள், பழைய காய்கள், பூச்சி தாக்கிய பகுதிகளை அகற்றுங்கள். அவை மீண்டும் தாக்க வாய்ப்பு குறையும்.

விவசாயத்தில் அறிவியல் மிக முக்கியம். பூச்சிக்கொல்லியை மட்டும் நம்பாமல், பசுமையான வழிகளும், சுத்தமான நிலமும், சரியான ஆலோசனையும் இருந்தால் தான், பழுதுகள் முழுமையாக கட்டுப்படும். உங்கள் ஏலக்காய் பயிரை பாதுகாக்க, KVK போன்ற அரசு அமைப்புகளை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள்.

விவசாயம் அறிவியலோடு இணைந்தால் தான் வெற்றி உறுதி!

Releated Posts

இடுக்கியில் தொடர்ந்து மழை – விவசாயிகள் முன்னேற்பாடுகளுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

இடுக்கி மாவட்டத்தில் ஜூன் 9 முதல் 15 வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பெரும்பாலும் மேகமூட்டம்…

தற்போதைய கடும் மழையில் ஏலக்காய் பயிரை பாதிப்பது எத்தனால் – கடும் மழையை ? காற்றா ?

ஏலக்காய் (Cardamom) என்பது “மசாலாக்களின் ராணி” என அழைக்கப்படும் விலை உயர்ந்த ஒரு மசாலாக்கள் வகை ஆகும். இது பெரும்பாலும் மலையகம் மற்றும் ஈரநிலத்தையுடைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top