
இடுக்கி மாவட்டத்தில், ஒரு வயோதிப பெண் தவறுதலாக “உம்மத்திக்காய்” எனப்படும் ஜிம்சன் வீட் (Jimsonweed) செடியின் விதைகளை உண்டதால் உயிரிழந்தார். இந்த செடி அதன் அழகான பூக்களால் மக்கள் கவனத்தை ஈர்க்கும் போதிலும், அதன் அனைத்து பகுதிகளும், குறிப்பாக விதைகள் மற்றும் இலைகள், மிகவும் விஷமுள்ளவை. இந்த செடியில் உள்ள Atropine, Hyoscyamine மற்றும் Scopolamine போன்ற வேதிச்சேர்மங்கள் நரம்பு மண்டலத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடியவை.
இந்த விஷம் உடலில் சேரும்போது, சிறுநீர் கழிக்க முடியாமை, வயிற்று வலி, கண்ணாடி போன்ற கண்ண்கள், வாய் வறட்சியுடன் கனத்த தாகம், வாந்தி, மயக்கம், இருதயத்துடிப்பு அதிகரிப்பு, சருமம் வெப்பமாக, சிவப்பாக, வறண்டதாக மாறுதல், காய்ச்சல், தவறான காட்சிகள் (hallucinations), மயக்கம் அல்லது கோமா போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம்.
இந்த வகையான விஷமயமாதல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். சிகிச்சை முறைகளில், உடலில் உள்ள விஷத்தை உறிஞ்சி வெளியேற்றுவதற்காக Activated charcoal கொடுக்கப்படலாம், ஒவ்வொரு அறிகுறிக்கும் ஏற்ப தனிப்பட்ட மருந்துகள் வழங்கப்படலாம், சுவாசம் மற்றும் இருதய செயல்பாடுகளை பராமரிக்க உதவிகள் செய்யப்படலாம், மேலும் இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, ECG போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.
இவ்வாறு, இயற்கையில் காணப்படும் சில செடிகள் மிகவும் ஆபத்தானவை என்பதால், பொதுமக்கள் அவற்றை அடையாளம் கண்டு, தவிர்க்கும் முறைகளைப் பின்பற்ற வேண்டும். இது போன்ற விஷமுள்ள செடிகளை அறிந்து, பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.